சென்னை: கலைஞரால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற தேவையான சட்டங்கள் இயற்றப்படும். பெரிய நகரங்களின் நெருக்கடியை குறைக்க புறநகர் பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய துணை நகரங்கள் உருவாக்கப்படும். கட்சத்தீவை மீட்பது, மீனவர் நலனை பாதுகாக்கும் வகையில் உயிரிழப்புகளை தடுப்பது, தீர்வு காண ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.